உத்திரமேரூரில் அம்மனுக்கு வெள்ளி கவசம்
உத்திரமேரூர், டிச,22
உத்திரமேரூர்: உத்திரமேரூரில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயம் உள்ளது. இங்குள்ள மூலவருக்கு வெள்ளி கவசம் பொருத்த உபயதாரர்கள் முடிவு செய்தனர். அதன்படி அந்த பணி முடிந்து நேற்று பிரதிஷ்டை நடந்தது. முன்னதாக முத்து பிள்ளையார் கோயிலில் இருந்து பக்தர்கள் 250 பெண்கள் பால்குடம் ஏந்தி, பஜார் வீதி வழியாக ஊர்வலமாக கோயிலுக்கு சென்று அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். இதையடுத்து, நாதஸ்வரம், மேளதாளங்கள் முழங்க 101 கலச பூஜைகள் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்தனர்.
உத்திரமேரூர்: உத்திரமேரூரில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயம் உள்ளது. இங்குள்ள மூலவருக்கு வெள்ளி கவசம் பொருத்த உபயதாரர்கள் முடிவு செய்தனர். அதன்படி அந்த பணி முடிந்து நேற்று பிரதிஷ்டை நடந்தது. முன்னதாக முத்து பிள்ளையார் கோயிலில் இருந்து பக்தர்கள் 250 பெண்கள் பால்குடம் ஏந்தி, பஜார் வீதி வழியாக ஊர்வலமாக கோயிலுக்கு சென்று அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். இதையடுத்து, நாதஸ்வரம், மேளதாளங்கள் முழங்க 101 கலச பூஜைகள் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்தனர்.
No comments