Disqus Shortname

உத்திரமேரூர் அருகே இரு வேறு இடங்களில் 2 பஸ்கள் கண்ணாடி உடைப்பு

உத்திரமேரூர் 29
வந்தவாசியில் இருந்து சென்னை சென்று கொண்டிருந்த தடம் எண் 148 அரசு பஸ் உத்திரமேரூர் அடுத்த ஆரோகியபுரம் அருகே வந்து கொண்டிருந்த போது இருசக்கர
வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இருவர்  பஸ் மீது கல் வீசினர். இதில் பஸ் முன்கண்ணாடி உடைந்தது. பஸ் ஓட்டுனர் லட்சுமணன் (40) பலத்த
காயமடைந்தார் பஸ்சில் இருந்த பயணிகள் 4 பேருக்கு சிறுகாயம் ஏற்பட்டது.
ஓட்டுநர் உட்பட காயம் ஏற்பட்டவர்கள் அருகில் உள்ள மானாம்பதி சமுதாய
சுகாதார நிலையத்திற்கு சென்று சிகிச்சைப் பெற்றனர்.  சம்பவ இடத்திற்கு
வந்த பெருநகர் போலீசார் பஸ்சில் இருந்த பயணிகளை வேறு பஸ்சில் மாற்றி
அனுப்பிவைத்தனர்.

 இதே போல் சென்னையில் இருந்து வந்தவாசி சென்று கொண்டிருந்த அரசு பஸ் தடம்
எண் 104 உத்திரமேரூர் அடுத்த ஓங்கூர் அருகே வந்த போது அடையாளம்
தெரியாதவர்கள் கல் வீசியதில் பஸ் முன் கண்ணாடி உடைந்தது. அதிஷ்ட வசமாக
யாருக்கும் காயம் ஏற்படவில்லை சம்பவ இடத்திற்கு வந்த உத்திரமேரூர்
போலீசார் பஸ்சில் இருந்த பயணிகளை வேறு பஸ்சில் மாற்றி அனுப்பிவைத்தனர்.

No comments