Disqus Shortname

வியாபாரிகளுக்கு எச்சரிக்கை தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை

உத்திரமேரூர் டிச,29

உத்திரமேரூர் பேரூராட்சியில் 40 மைக்ரான் குறைவான பிளாஸ்டிக் பொருட்களை
முற்றிலும் தடை செய்யப்பட வேண்டும் என பேரூராட்சிகள் இயக்குனர்
அறிவுரையின் படி பொது மக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு துண்டுபிரசுரங்கள்.
பேரணி மூலமும், கலை நிகழ்ச்சிகள் மூலமும், பேரூராட்சி  நிர்வாகம் பல்வேறு
வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இதையடுத்து சென்ற வாரம்
வியாபாரிகளிடம் திடீர் ஆய்வு நடத்தி பிளாஸ்டிக்தடை குறித்து
எச்சரிக்கையும் விடுத்துள்ளது. இது குறித்து  உத்தரமேரூர் செயல்அலுவலர்
கமல்ராஜ் கூறியது

ஜனவரி 1ஆம் தேதி முதல் 40 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்களை
விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இதே போல் பொது மக்கள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து
வழங்கி பேரூராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு தந்து சுகாதாரமான
பேரூராட்சியாக மாற்றுவோம்.

No comments