Disqus Shortname

இருளர் குடியிருப்பில் மனித உரிமைகள் தினம்

உத்திரமேரூர் டிச, 11
உத்திரமேரூர் அடுத்த தளவராம்பூண்டி ஊராட்சியில்  வினோபாநகர் இருளர் காலணி பகுதியில் வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் மனித உரிமைகள் தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கண்ணியம்மாள்முனுசாமி தலைமை தாங்கினார். உத்திரமேரூர் குற்றவியல் மற்றும் நடுவர் நீதிமன்ற நீதிபதி எம்.ஜெய்சங்கர் முன்னிலை வகித்து சிறப்புரையாற்றினார். இதில் மனிதர்கள் உயிர் வாழ்வதற்கான உரிமைகள், கருத்து சுதந்திரம், மனிதன் சுதந்திரமாக வாழ்வதற்கான கல்வி, மருத்துவம், சுகாதாரம், குடிநீர் உள்ளிட்ட வற்றை பற்றி விளக்கிக்கூறினார். மேலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கு அரசின் நல திட்டங்கள் பெறுவது, கொத்தடிமைகள் மீட்பு போன்ற பல்வேறு பிரச்சனைகளை சட்டத்தின் மூலம் தீர்வு காண்பது பற்றி எடுத்துரைத்தார். இந்த நிகழ்ச்சியில் உத்திரமேரூர்
வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் கருணாநிதி, மற்றும் வழக்கறிஞர்கள்  உட்பட ஏராளமாமோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வட்ட சட்ட பணிகள்
குழுவின் மூத்த நிர்வாகி இராமலிங்கம் சிறப்பாக செய்திருந்தார்.

No comments