Disqus Shortname

உத்திரமேரூரில் 6ம் தேதி தேசிய லோக் அதாலத்

உத்திரமேரூர் டிச,02 :
 காஞ்சிபுரம் மாவட்டத் தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் வரும் 6ம் தேதி, 'தேசிய லோக் அதாலத்' நடைபெறவுஉள்ளது.
தேசிய சட்டப்பணிகள் வழிகாட்டுதலின்படி, நிலுவையில் உள்ள பல்வேறு வழக்குகளை தீர்க்க, இந்தியா முழுவதும் நீதிமன்றங்களில் 'தேசிய லோக் அதாலத்' அவ்வப்போது நடைபெற்று வருகிறது. அந்த வகையில், வரும் 6ம் தேதி இந்தியா முழுவதும் 'தேசிய லோக் அதாலத்'
நடைபெறவுள்ளது.இதன் ஒரு பகுதியாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார், மதுராந்தகம் ஆகிய நீதிமன்றங்களில் 'தேசிய லோக் அதாலத்' நடைபெறஉள்ளது. அப்போது, பல்வேறு சட்டம் சார்ந்த பிரச்னைகளும், நிலுவை யில் உள்ள வழக்குகளும் உடனடியாக விசாரணைக்கு எடுக்கப்படஉள்ளன. காசோலைகள், மோட்டார் வாகன விபத்துகள், ஜீவனாம்சம், உரிமையியல் மேல்முறையீடுகள், வங்கி கடன், சம்பளம் தொடர்பான வழக்கு போன்ற வழக்குகளில், சமாதானம் செய்து கொள்ளக்
கூடியவை, விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளன. 'தேசிய லோக் அதாலத்' தொடர்பாக, தங்கள் பகுதியில் உள்ள நீதிமன்றத்தில் உள்ள சட்ட உதவி அலுவலகத்தை பகுதிவாசிகள் தொடர்பு கொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments