திருப்புலிவனம் வாடாதவூர் சாலை சிரமைக்க கோரிக்கை
உத்திரமேரூர் டிச,21
உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனம் முதல் வடாதவூர் வரை செல்லும் 8 கிமீ
தொலைவுள்ள சாலை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு சீர்செய்யக் பொது மக்கள்
கோரிக்கை விடுத்ததின் போரில் கடந்த ஆட்சிகாலத்தில் தார் சாலை
அமைக்கப்பட்டது. இந்த சாலை வழியாக மருதம், சித்தமல்லி, கடல்மங்கலம்,
வாடாதவூர், பாண்டவாக்கம், குண்ணவாக்கம், பாலேஸ்வரம், வயலக்காவூர்,
மளையாங்குளம், படூர் போன்ற 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இந்த
கிராம மக்கள் நாள் ஒன்றுக்கு ஆயிரத்திற்கு மேற்பட்டோர் இச்சாலையை
பயன்படுத்தி வருகின்றனர். இச்சாலை கடந்த இரண்டு வருடங்களாக குண்டும்
குழியுமான மிகவும் மோசமான நிலையில் அதிக பள்ளமுடன் காணப்படுகின்றது.
இச்சாலையை பயன்படுத்தும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவியர்கள்,
கற்பிணிப் பெண்கள் மற்றும் முதியோர்கள், வேலைக்குசெல்லும் பொதுமக்கள்
மிகவும் சிரமத்திற்க்குள்ளாகுகின்றனர். இரவு நேரங்களில் அவசர
சிகிச்சைக்கு இச்சாலையை கடக்கும் நேயாளிகள் தவறி விழுந்து காயமடைவதுடன்
உயிர்யிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் இரு சக்கர வாகனத்தில்
செல்லுபவர்கள் இரவு நேரங்களில் பள்ளம் அரியாமல் கீழே விழுந்து காயம்
அடைவது வாடிக்கையாகி விட்டது. மேலும் தற்போது பெய்த மழையில் சாலையில்
உள்ள பள்ளங்கள் தண்ணீர் தேங்கி சாலை தெரியாமல் சேரும் சகதியாக குளம் போல்
காட்சியளிக்கிறது, இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகுகின்றனர்.
எனவே இச்சாலையை விரைவில் சீரமைத்து தர அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.
உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனம் முதல் வடாதவூர் வரை செல்லும் 8 கிமீ
தொலைவுள்ள சாலை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு சீர்செய்யக் பொது மக்கள்
கோரிக்கை விடுத்ததின் போரில் கடந்த ஆட்சிகாலத்தில் தார் சாலை
அமைக்கப்பட்டது. இந்த சாலை வழியாக மருதம், சித்தமல்லி, கடல்மங்கலம்,
வாடாதவூர், பாண்டவாக்கம், குண்ணவாக்கம், பாலேஸ்வரம், வயலக்காவூர்,
மளையாங்குளம், படூர் போன்ற 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இந்த
கிராம மக்கள் நாள் ஒன்றுக்கு ஆயிரத்திற்கு மேற்பட்டோர் இச்சாலையை
பயன்படுத்தி வருகின்றனர். இச்சாலை கடந்த இரண்டு வருடங்களாக குண்டும்
குழியுமான மிகவும் மோசமான நிலையில் அதிக பள்ளமுடன் காணப்படுகின்றது.
இச்சாலையை பயன்படுத்தும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவியர்கள்,
கற்பிணிப் பெண்கள் மற்றும் முதியோர்கள், வேலைக்குசெல்லும் பொதுமக்கள்
மிகவும் சிரமத்திற்க்குள்ளாகுகின்றனர். இரவு நேரங்களில் அவசர
சிகிச்சைக்கு இச்சாலையை கடக்கும் நேயாளிகள் தவறி விழுந்து காயமடைவதுடன்
உயிர்யிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் இரு சக்கர வாகனத்தில்
செல்லுபவர்கள் இரவு நேரங்களில் பள்ளம் அரியாமல் கீழே விழுந்து காயம்
அடைவது வாடிக்கையாகி விட்டது. மேலும் தற்போது பெய்த மழையில் சாலையில்
உள்ள பள்ளங்கள் தண்ணீர் தேங்கி சாலை தெரியாமல் சேரும் சகதியாக குளம் போல்
காட்சியளிக்கிறது, இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகுகின்றனர்.
எனவே இச்சாலையை விரைவில் சீரமைத்து தர அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.
No comments