2015 முதல் 'பிளாஸ்டிக்' இல்லாத பேரூராட்சியாக, உத்திரமேரூரை மாற்ற திட்டம்
உத்திரமேரூர்
பேரூராட்சி அலுவலகத்தில் அவசர ஆலோசனை கூட்டம் வியாழக்கிழமையன்று நடந்தது. மன்ற தலைவர்
சுமதிகுணசேகர் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் இ.தயாளன் முன்னிலை வகித்தார். பேரூராட்சி
செயல் அலுவலர் த.ந.கமல்ராஜ் அனைவரையும் வரவேற்றார் கூட்டத்தில் 2015 முதல் முழுவதுமாக
பிளாஸ்டிக் தவிர்த்தல் மற்றும் திடக்கழிவு
மேலாண்மை திட்டம் சிறப்பாக செயல்படுத்த வேண்டிய அவசர ஆலோசனை கூட்டத்தில் செயல்படுத்துவது
குறித்து பேசினார்கள் இக்கூட்டத்தில் நுகர்வோர் பாதுகாப்பு சங்க செயலர் ஜெயராமன், உத்திரமேரூர்
ஊராட்சி ஒன்றிய பள்ளி தலைமை ஆசிரியர்கள் உத்திரமேரூர்
சோழா அரிமா சங்க நிர்வாகிகள் மீனாட்சி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி நிர்வாகிகள் அனைத்து
வியாபாரிகள் சங்கத்தினர் கலந்து கொண்டனர். மே.ச.வெ.அனந்தசயனம் நன்றி கூறினார்
No comments