Disqus Shortname

மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

உத்திரமேரூர் டிச, 24: 
மின் கட்டண உயர்வை கண்டித்து சிஐடியு விவசாய சங்கம், மாதர் சங்கம் இணைந்து உத்திரமேரூர் தாலுகா அலுவலகம் எதிரே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம்நடந்தது. சிஐடியு மாவட்ட குழு உறுப்பினர் பெருமாள் தலைமை வகித்தார். சிஐடியு சங்க நிர்வாகிகள் ராமன், குமரவேல், கண்ணாயிரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விவசாய சங்க மாவட்ட தலைவர் பாஸ்கரன், விவசாய சங்க வட்ட செயலாளர் பெருமாள், மாதர் சங்க செயலாளர் ஜெயந்தி உள்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மின் கட்டண உயர்வை வாபஸ் பெற வலியுறுத்தி கோஷமிட்டனர். முன்னதாக, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அம்பேத்கர் சிலையில் இருந்து ஊர்வலமாக சென்றனர்.

No comments