Disqus Shortname

உத்திரமேரூரில் சனிப்பெயர்ச்சி விழா கோலாகலம்

உத்திரமேரூர் டிச,16
உத்திரமேரூரில் நேற்று சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு ஸ்ரீபாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சனிபகவானுக்கு இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சனிப்பெயர்ச்சியானது பஞ்சாங்கப்படி டிச 16-ம் தேதி செவ்வாய்க்கிழமையன்று பிற்பகல் 2.43  மணிக்கு நடைபெற்றது. அதுசமயம், சனிபகவான் துலாம்  ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பிரவேசித்தார். அப்போது சனிபகவானுக்கு, ராஜப்பா குருக்கள் தலைமையில் விசேஷ பூஜைகள்  நடந்தது. கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார்கள். உத்திரமேரூர் முத்து  பிள்ளையார் கோவிலில் சனி பகவானுக்கு சிறப்பு பூஜைகளும் யாகங்களும் சிறப்பாக நடைப்பெற்றது. பின்னர் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் ஜோதிட ஞானி துளசிராமன் சொற்பொழிவு ஆற்றினார். இதேப்போல் உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனம் ஸ்ரீ வியாக்ரபுரீஸ்வரர் கோவிலில் சனி பகவானுக்கு குணசேகர குருக்கள் தலைமையில் விசேஷ பூஜைகள் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் எள் தீபமேற்றி சனி பகவானை வழிப்பட்டனர்.

No comments