Disqus Shortname

மாணவியிடம் சில்மிஷம் : முதியவருக்கு ஜெயில்

உத்திரமேரூர் டிச,03:
உத்திரமேரூர் அருகே பள்ளி மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். உத்திரமேரூர் அடுத்த பெருங்கொழி கிராமத்தைச் சேர்ந்தவர் நாகப்பன் (54). இவர் நேற்று அப்பகுதியில் உள்ள வயல் வெளியில் மாடு மேய்த்து கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த பள்ளி மாணவியிடம் தகாத முறையில் நடக்க முயற்சித்துள்ளார். நாகப்பனின் பிடியில் இருந்து தப்பிய மாணவி வீட்டிற்கு சென்றார். அங்கு தனது பெற்றோரிடம் நடந்த விஷயங்களை அழுதபடியே கூறினாள். இது தொடர்பாக உத்திரமேரூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பெயரில் போலீசார் வழக்கு பதிந்து நாகலிங்கத்தை கைது செய்து உத்திரமேரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர்.

No comments