பைக் திருடர்களுக்கு ஜெயில்
உத்திரமேரூர் டிச,03:
உத்திரமேரூர் அருகே வீட்டு முன் நிறுத்திய பைக்கை திருடி சென்ற 3 வாலிபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.உத்திரமேரூர் அடுத்த காக்கநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (43). விவசாயி. நேற்று முன்தினம் இரவு இவர் வீட்டு முன் நிறுத்தியிருந்த பைக்கை நள்ளிரவில் மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இது தொடர்பாக உத்திரபேரூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். இதில், உத்திரமேரூர் சேகர் (24). வேடபாளையம் அஜித் (24), வந்தவாசி மணிகண்டன் (28) ஆகிய 3 பேரை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் பைக் திருடி சென்றது தெரியவந்தது. இதனை அடுத்து அவர்களை உத்திரமேரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர்.
thaks.tamilmurasu
உத்திரமேரூர் அருகே வீட்டு முன் நிறுத்திய பைக்கை திருடி சென்ற 3 வாலிபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.உத்திரமேரூர் அடுத்த காக்கநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (43). விவசாயி. நேற்று முன்தினம் இரவு இவர் வீட்டு முன் நிறுத்தியிருந்த பைக்கை நள்ளிரவில் மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இது தொடர்பாக உத்திரபேரூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். இதில், உத்திரமேரூர் சேகர் (24). வேடபாளையம் அஜித் (24), வந்தவாசி மணிகண்டன் (28) ஆகிய 3 பேரை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் பைக் திருடி சென்றது தெரியவந்தது. இதனை அடுத்து அவர்களை உத்திரமேரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர்.
thaks.tamilmurasu
No comments