உத்திரமேரூரில் பஸ் டிரைவரை தாக்கிய 2 பேர் சிறையில் அடைப்பு
உத்திரமேரூர் டிச,10, :
உத்திரமேரூரில் இருந்து எல் எண்டத்தூர் வழியாக மதுராந்தகம் செல்லும் அரசு பஸ் (த.எ.டி15) கடந்த 7ம் தேதி மாலை 5.30 மணிக்கு உத்திரமேரூர் பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டது. பஸ்சை டிரைவர் இளையராஜா (34) ஓட்டினார். பஸ் நிலையத்தில் இருந்து வெளியே வந்த பஸ் மீது எதிரே வந்த கார் உரசியது. இதையடுத்து பஸ் டிரைவருக்கும் காரில் வந்த வாலிபர்களுக்கும் தகராறு ஏற்பட்டது.இதை அப்பகுதியில் பணியில் இருந்த போலீசார் சமரசம் செய்து வைத்தனர்.
பஸ் அங்கிருந்து கிளம்பி பட்டஞ்சேரி அருகே சென்று கொண்டிருந்தது, கார் முந்தி சென்று பஸ்சை வழிமறித்து நின்றது. காரில் இருந்த வாலிபர்கள், டிரைவர் இளையராஜாவை சரமாரியாக தாக்கிவிட்டு, அங்கிருந்து சென்றனர். படுகாயமடைந்த அவரை, பயணிகள் மீட்டு உத்திரமேரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
புகாரின்பேரில் உத்திரமேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து காட்டாங்குளம் கிராமத்தை சேர்ந்த சதீஷ் (28), படூர் வேலு (24) ஆகியோரை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். பின்னர், அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
உத்திரமேரூரில் இருந்து எல் எண்டத்தூர் வழியாக மதுராந்தகம் செல்லும் அரசு பஸ் (த.எ.டி15) கடந்த 7ம் தேதி மாலை 5.30 மணிக்கு உத்திரமேரூர் பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டது. பஸ்சை டிரைவர் இளையராஜா (34) ஓட்டினார். பஸ் நிலையத்தில் இருந்து வெளியே வந்த பஸ் மீது எதிரே வந்த கார் உரசியது. இதையடுத்து பஸ் டிரைவருக்கும் காரில் வந்த வாலிபர்களுக்கும் தகராறு ஏற்பட்டது.இதை அப்பகுதியில் பணியில் இருந்த போலீசார் சமரசம் செய்து வைத்தனர்.
பஸ் அங்கிருந்து கிளம்பி பட்டஞ்சேரி அருகே சென்று கொண்டிருந்தது, கார் முந்தி சென்று பஸ்சை வழிமறித்து நின்றது. காரில் இருந்த வாலிபர்கள், டிரைவர் இளையராஜாவை சரமாரியாக தாக்கிவிட்டு, அங்கிருந்து சென்றனர். படுகாயமடைந்த அவரை, பயணிகள் மீட்டு உத்திரமேரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
புகாரின்பேரில் உத்திரமேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து காட்டாங்குளம் கிராமத்தை சேர்ந்த சதீஷ் (28), படூர் வேலு (24) ஆகியோரை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். பின்னர், அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
No comments