Disqus Shortname

ஐயப்ப சாமிக்கு சந்தனகாப்பு 108 பால் குட ஊர்வலம்

உத்திரமேரூர் டிச,16
உத்திரமேரூரில் செவ்வாய்க்கிழமையன்று ஐயப்பசாமிக்கு 9-ம் ஆண்டு சந்தனகாப்பு அபிஷேகமும், திருவிளக்கு பூஜையும் இரட்டை தாளீஸ்வரர் கோவிலில் சிறப்பாக நடந்தது,  முன்னதாக காலை 8 மணி அளவில் முத்து பிள்ளையார் கோவிலில் இருந்து 108 பால்குடங்களுடன் ஐயப்ப பக்தர்கள் பஜார் வீதி வழியாக ஊர்வலமாக புறப்பட்டு ஸ்ரீ.பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் அமைந்துள்ள தர்மசாஸ்தா சிலைக்கு 108 பாலஅபிஷேகம் செய்து சுவாமியை வழிப்பட்டனர். இரட்டை தாளிஸ்வரர் கோவிலில் குருசாமி கெஜா தலைமையில் சுவாமி அய்யப்பனுக்கு சந்தனகாப்பும், திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது. வெ.குணசேகர் அரிமா சங்க மாவட்ட மண்டல தலைவர் எஸ். கமல்கிஷோர், யூ.அமர்த்லால், டி.பர்சன்ராஜ், எஸ்.குமார் ஆகியோர் பொதுமக்கள் பக்தர்கள் 1127 நபர்களுக்கு அறுசுவை உணவு வழங்கினார்கள். விழாவிற்கான ஏற்பாடுகளை அய்யப்பா சேவா சங்கத்தினர் செய்திருந்தனர்.

No comments