Disqus Shortname

சாதிவாரி கணக்கெடுப்பு கோரி உத்திரமேரூரில் பாமக ஆர்ப்பாட்டம்

உத்திரமேரூர் டிச,09
உத்திரமேரூரில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நேற்று கண்டன ஆர்பாட்டம்
நடத்தப்பட்டது. தமிழகத்தில் மீண்டும் உடனடியாக சாதிவாரிக்கணக்கெடுப்பை நடத்திட வேண்டும். ஒவ்வொரு சமுதாயத்திற்கும் அளிக்கப்பட வேண்டிய இடஒதுக்கீட்டை நடைமுறைபடுத்த வேண்டும். கர்நாடகம் மற்றும் பிற மாநிலங்களில் நடைமுறையில் உள்ள சாதிவாரி கணக்கெடுப்பு முறையை உடனடியாக
தமிழகத்திலும் முறைப்படுத்திட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வளியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில்  பா.ம.க மேற்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். மேற்கு ஒன்றிய தலைவர் செல்வகுமார், கிழக்கு ஒன்றிய செயலாளர் ஸ்ரீதர்,  நகர தலைவர் முருகன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் அனைவரும் கண்டன உரையாற்றினர். முன்னதாக முடிவில் நகர செயலாளர் இரா.அரசு, ஒன்றிய இளைஞரணி செயலாளர் இராமதாஸ் ஆகியோர்  நன்றி கூறினார்.

No comments