Disqus Shortname

ரெட்டமங்கலத்தில் 50 கறவை பசுகள், 20 பயனாளிகளுக்கு வெள்ளாடுகள் வழங்கும் விழா

உத்திரமேரூர் டிச,13
உத்திரமேரூர் அடுத்த ரெட்டமங்கலம் கிராமத்தில் நேற்று கறவை பசுகள்
மற்றும் ஆடுகள் வழங்கும் விழா நடைப்பெற்றது. விழாவில் 16 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய் மதிப்பிளான  50 பயனாளிகளுக்கு
கறவை பசுமாடுகளையும், 2 லட்சத்து 43 ஆயிரம் ரூபாய் மதிப்பிளான 20
பயனாளிகளுக்கு  வெள்ளாடுகளையும் கால் நடை பராமரிப்புதுறை அமைச்சர்
டி.கே.எம்.சின்னைய்யா வழங்கி சிறப்புரையாற்றினார். காஞ்சிபுரம் மாவட்ட
ஆட்சித் தலைவர் வே.க.சண்முகம் தலைமை தாங்கினார். உத்திரமேரூர் சட்ட மன்ற
உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசன் முன்னிலை வகித்தார்.  ஊராட்சி
மன்றத்தலைவர் ஹரிகிருஷ்ணன் வரவேற்றார். சேர்மென் ஆர்.கமலக்கண்ணன்,
துணைச்சேர்மென் அ.ரவிசங்கர், திருவந்தவார்முருகன், உட்பட பலர் கலந்து
கொண்டனர்.

No comments