Disqus Shortname

கேன்டீனில் அடிப்படை வசதி கோரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

உத்திரமேரூர்,டிச,10 :
கேன்டீனில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
உத்திரமேரூர் அடுத்த பருத்திக்கொள்ளை பகுதியில்உள்ள மீனாட்சி அம்மாள்  பாலிடெக்னிக் கல்லூரி செயல்படுகிறது. இங்கு 400க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். கல்லூரி வளாகத்தில் கேன்டீன் உள்ளது.
இங்குள்ள பொருட்கள் தரமாக இல்லை. குடிநீர் உள்பட அடிப்படை வசதிகள் இல்லை என கல்லூரி நிர்வாகத்திடம் மாணவ, மாணவிகள் புகார் கூறியுள்ளனர். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று காலை அனைத்து மாணவர்களும் கல்லூரிக்கு வந்தனர். பின்னர், மதியம் 12 மணியளவில் திடீரென வகுப்பை புறக்கணித்துவிட்டு, மாணவர்கள் கல்லூரி நுழைவாயிலில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து உத்திரமேரூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். கல்லூரிக்கு வெளியே நின்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையில் கல்லூரி முதல்வர்  போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளிடம் சமரசம் பேசினார்.
அப்போது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்

No comments