Disqus Shortname

மலையாங்குளம் ஊராட்சியில் அம்மா திட்ட முகாம்

உத்திரமேரூர் டிச,19
உத்திரமேரூர் கிழக்கு ஒன்றியம் மலையாங்குளம் ஊராட்சியில் மக்களை தேடி வரும் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமையன்று நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் ஜீவிதாஸ்ரீதர் தலைமை தாங்கினார். உத்திரமேரூர் தனி வட்டாட்சியர் ரமேஷ் வரவேற்றார். உத்திரமேரூர் ஒன்றிய குழுத்தலைவர் ஆர்.கமலக்கண்ணன் முன்னிலையில் காஞ்சி மேற்கு மாவட்ட கழக செயலாளரும், உத்திரமேரூர் சட்ட மன்ற உறுப்பினருமான வாலாஜாபாத்பா.கணேசன் கலந்துகொண்டு உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இயற்கைமரணம், ஈமச்சடங்கிற்கு உதவித்தொகைக்கான காசோலைகளை வழங்கி சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் சாலவாக்கம் மண்டல துணை வட்டாட்சியர் சுந்தராஜன், வருவாய் ஆய்வாளர் லோகநாதன், ஒழையூர் ஆர்.நாராணசாமி, வெடிஆனந்தன், வரலட்சுமிகருணாநிதி, கிராம நிர்வாக அலுவலர் மனோகரன் உட்பட பொது மக்கள் பலர் கலந்துகொண்டனர்.

No comments