பள்ளி ஆண்டுவிழா
உத்தரமேரூர் ஆக,31
உத்தரமேரூர் அடுத்த குப்பையநல்லுார் கிராமத்தில் இயங்கி வரும் லொயோலா மேல்நிலைப்பள்ளியில் 19 ஆம் ஆண்டு விழா சனிக்கிழமையன்று
காலை10 மணியவில் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் சென்னை
மறைபணிதல அதிபர் செபமாலைராஜா தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர்
தியாகராஜன் முன்னிலை வகித்தார். லொயோலா ஆசிரியர் அலுவலக செயலாளர் செந்தில்
வரவேற்றார். லொயோலா பள்ளி தாளாளர் ஜோசப்மிக்கேல் சிறப்பு அழைப்பாளராக
கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார். இவ்விழாவில் மாணவ மாணவியர்கள் கலை
நிகழ்ச்சிகள் நடத்தினர். 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு முதல்
மூன்று இடத்தை பிடித்த மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.
முடிவில் தலைமை ஆசிரியர் வில்லியம்அல்போன்ஸ் நன்றி கூறினார். இவ்விழாவில்
மாணவ மாணவிகள் மற்றும் பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்,
No comments