Disqus Shortname

ஆசிரியர்கள் கூட்டுறவு சிக்கன சேமிப்பு கடன் சங்க புதிய கட்டிடம் திறப்பு விழா.

உத்தரமேரூர் செப்,17
உத்தரமேரூர் பஞ்சாயத்து யூனியன் ஆசிரியர்கள் கூட்டுறவு சிக்கன   சேமிப்பு
கடன் சங்கத்திற்க்கு ரூ 14 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய கட்டிடம் திறப்பு
விழா அண்மையில் நடந்தது. மாவட்ட ஆட்சித்தலைவர் லி.சித்ரசேனன் தலைமை தாங்கினார். காஞ்சி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அ.இராமச்சந்திரன்  முன்னிலை வகித்தார். ஆசிரியர் கூட்டுறவு சங்க தலைவரும், ஒழையூர் ஊராட்சி ஒன்றிய பள்ளி தலைமை ஆசிரியருமான பி.பர்னபாஸ்பால்ரவிசந்திரன் அனைவரையும் வரவேற்றார். உத்தரமேரூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர். வாலாஜாபாத்.பா.கணேசன் புதிய கட்டிடத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். ஒன்றியக்குழுத்தலைவர்  இரா.கமலக்கண்ணன், துணைத்தலைவர் அ.ரவிசங்கர், பேரூராட்சி தலைவர் சுமதி குணசேகரன் துணைத்தலைவர் இ.தயாளன் அ.தி.மு.க ஒன்றிய செயலாளர்கள் வி.ஆர்.அண்ணாமலை,
கே.பிரகாஷ்பாபு .மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் ஜெ.பாஸ்கரன், உத்தரமேரூர் உதவி தொடக்கல்வி அலுவலர் ஏ.பச்சையப்பன் வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஏ.இராஜேந்திரன் முன்னாள் சங்கத்தலைவர் கே.ஆர்.ஜெயராமன் சங்க இயக்குநர் டி.ஜி.லியோ உட்பட பலர் பங்கேற்றனர். சங்க துணைத்தலைவர் டி.தனசேகரன் நன்றி கூறினார்.

No comments