Disqus Shortname

உத்தரமேரூரில் நீதி மன்றத்திற்கு கூடுதல் இடம் அளிக்க வழக்கறிஞர்கள் கோரிக்கை

உத்ரமேரூர் செப்,14
உத்தரமேரூரில் நீதி மன்றத்திற்க்கு கட்டிடம் கட்ட ஒரு ஏக்கர், என்பது செண்ட் நிலம் உத்தரவிடப்பட்டுள்ளது. உத்தரமேரூர் வழக்கறிஞர்கள்  கூடுதலாக 2 ஏக்கர் நிலம் அளிக்க வேண்டி வெள்ளிக்கிழமையன்று மாவட்ட ஆட்சியர் லி.சித்ரசேனனிடமும், உத்தரமேரூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசனிடமும் உத்தரமேரூர் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர். 1999- ஆம் ஆண்டு துவங்கப்பட்ட கோர்ட் இன்று வரை வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. 2 ஏக்கர் நிலம் வழங்க எம்.எல்.ஏ.வாலாஜாபாத்.பா.கணேசன் நிலம் அளிக்கலாம் என்று கூறியவுடன் காஞ்சி மாவட்ட ஆட்சியர் லி.சித்ரசேனன் உத்தரமேரூர் வட்டாட்சியர் சாவித்ரியிடம் நீதி மன்றத்திற்கு 2 ஏக்கர் நிலம் அளிக்க உத்தரவிட்டார். நீதி மன்றத்திற்க்கு  வட்டாட்சியர் 2 ஏக்கர் நிலம் அளிப்பதாக கூறினார். வழக்கறிஞர்கள் மாவட் ஆட்சியருக்கும் எம்.எல்.ஏ.விற்கும் நன்றி தெரிவித்தனர்.

No comments