உத்தரமேரூரில் சுந்தரவரதராஜப் பெருமாள் வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்
உத்தரமேரூர் செப் -22
உத்தரமேரூர் ஸ்ரீ ஆனந்தவல்லி நாயகா சமேத ஸ்ரீ
சுந்தரவரதராஜப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ வீர ஆஞ்சநேயருக்கு புரட்டாசி முதல்
சனிக்கிழமையை(செப் -21) முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. ஸ்ரீ ஆனந்தவல்லி தாயாரையும், ஸ்ரீ
சுந்தரவரதராஜப்பெருமாளையும் காலை 5 மணி முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று
வழிபட்டனர். கோவில் தர்மகர்த்தா
பக்கதர்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கினார்.
புரட்டாசி 3-ம் வாரம் பக்தர்கள் வடை, பாயாசத்துடன் படையலிட்டு பெருமாளை
வழிபடுவார்கள் புரட்டாசி 19-ம் தேதி, அக்டோபர் மாதம் 5-ம் தேதி சனிக்கிழமையன்று அமாவாசை மறுநாள் பிரதமை திதி வருவதால்
பெரும்பாலான பொதுமக்கள் புரட்டாசி முதல் சனிக்கிழமை பெருமாளுக்கு வடை,
பாயாசத்துடன் படையலிட்டு வழிபட்டனர்.
No comments