Disqus Shortname

ரெட்டைமலை சீனிவாசன் நினைவு நாள்:தொல்.திருமாவளவன் அஞ்சலி

ரெட்டைமலை சீனிவாசனின் நினைவு தினத்தையொட்டி கோழியாளம் கிராமத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வியாழக்கிழமை(செப்,19,) அஞ்சலி செலுத்தினார்.
இந்நிகழ்ச்சிக்கு அக்கட்சியின் காஞ்சி மாவட்டச் செயலாளர் விடுதலைச்செழியன் தலைமை வகித்தார்.
மாவட்ட செய்தி தொடர்பாளர் எழிலரசு, ரஞ்சித் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில் பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளன், ரெட்டைமலை சீனிவாசனின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
இதனைத்தொடர்ந்து பண்டிதர் அயோத்திதாசர் நுôலகத்தையும் அவர் திறந்து வைத்தார்.
கட்சியின் பொருளர் முகமது யூசுப், உத்தரமேரூர் ஒன்றியச் செயலர் ராபர்ட் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments