Disqus Shortname

உத்திரமேரூர் அருகே அரசு பஸ்–லாரி மோதல்: 12 பேர் படுகாயம்

உத்திரமேரூர், செப். 20–
திருத்தணியில் இருந்து பாண்டிச்சேரி நோக்கி அரசு பஸ் சென்றது. டிரைவர் சங்கர் ஓட்டினார். 30–க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். உத்திரமேரூரை அடுத்த பெருநகர் செய்யாற்று பாலம் அருகே வந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து எதிரே காஞ்சீபுரம் நோக்கி சென்ற லாரி மீது அரசு பஸ் நேருக்கு நேர் மோதியது.
இதில் லாரி–பஸ்சின் முன் பகுதிகள் நொறுங்கின. பஸ் டிரைவர் சங்கர், லாரி டிரைவர் மாம்பாக்கத்தை சேர்ந்த பழனி, பயணிகள் முருகேசன், ராமகிருஷ்ணன், வேலு உள்பட 12 பேர் படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்ததும் பெருநகர் சப்–இன்ஸ்பெக்டர் பனிழிசாமி மற்றும் போலீசார் விரைந்து வந்து விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.அந்த பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் எற்படுவதால் வேக தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

No comments