பள்ளி வேன் கவிழ்ந்து 8 மாணவர்கள் காயம்
உத்தரமேரூர் செப், 06
உத்திரமேரூர் அருகே தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 மாணவ, மாணவிகள் காயமடைந்தனர். உத்தரமேரூர் ஒன்றியத்துக்குள்பட்ட சாலவாக்கத்தில் ஸ்டாண்டர்டு மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் வெள்ளிக்கிழமை மாலை பள்ளி முடிந்ததும் 12-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களுடன் பள்ளி வேன் புறப்பட்டது. வழியில் அன்பரசன் (18) என்ற வேறு பள்ளி மாணவரும் வேனில் ஏறிக்கொண்டார்.டிரைவர் மணிகண்டன் வேனை ஓட்டி வந்தார்.கைந்தண்டலம் அருகே சென்ற போது வேன் திடீரென நிலைத்தடுமாறி சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் வேனில் இருந்த தரணி (4), ஜனனி (8), ஸ்ரீஜா (6), நரணி (6), சந்தோஷ் (5), நந்தகுமார் (10), ரித்தீஷ் (5), தமிழ் (6), அன்பரசன் (18) ஆகியோர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவிட்டு வீடு திரும்பினர்.அன்பரசன் மட்டும் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து சாலவாக்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்திரமேரூர் அருகே தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 மாணவ, மாணவிகள் காயமடைந்தனர். உத்தரமேரூர் ஒன்றியத்துக்குள்பட்ட சாலவாக்கத்தில் ஸ்டாண்டர்டு மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் வெள்ளிக்கிழமை மாலை பள்ளி முடிந்ததும் 12-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களுடன் பள்ளி வேன் புறப்பட்டது. வழியில் அன்பரசன் (18) என்ற வேறு பள்ளி மாணவரும் வேனில் ஏறிக்கொண்டார்.டிரைவர் மணிகண்டன் வேனை ஓட்டி வந்தார்.கைந்தண்டலம் அருகே சென்ற போது வேன் திடீரென நிலைத்தடுமாறி சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் வேனில் இருந்த தரணி (4), ஜனனி (8), ஸ்ரீஜா (6), நரணி (6), சந்தோஷ் (5), நந்தகுமார் (10), ரித்தீஷ் (5), தமிழ் (6), அன்பரசன் (18) ஆகியோர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவிட்டு வீடு திரும்பினர்.அன்பரசன் மட்டும் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து சாலவாக்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments