Disqus Shortname

இலவச பொது மருத்துவ முகாம்

உத்தரமேரூர் செப் -11
உத்தரமேரூர் புதுவாழ்வு திட்டமும், காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவ
கல்லூரியும் இணைந்து செவ்வாய்கிழமையன்று இலவச பொதுமருத்துவ  சிகிச்சை முகாம் நடத்தினார்கள்.  பாலேஸ்வரம், ஆனம்பாக்கம் ஊராட்சியில் நடைபெற்ற இம்முகாமிற்கு ஊராட்சி மன்றத்தலைவர் டில்லிபாபு தலைமை தாங்கினார். புதுவாழ்வு திட்ட மாவட்ட மேலாளர் வி.தனசேகர் முகாமை துவக்கிவைத்தார். மீனாட்சியம்மாள் பாலிடெக்னிக் ஒருங்கிணைப்பாளர் வி.ராஜேந்திரன், உதவிதிட்ட மேலாளர் சுபான் ஆயோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர். இம்முகாமில் 180 பேருக்கு இலவச சிகிச்சை அளிக்கப்பட்டது. கண், இருதயம், எலும்பு, மூட்டு வலி நோயாளிகள் மேல்சிகிச்சைக்காக 30 நபர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இம்முகாமில் கலந்துகொண்டவர்களுக்கு இரத்தபரிசோதனை, இரத்தஅழுத்தம் பரிசோதிக்கப்பட்டு இலவச மருந்து மாத்திரிகைகள் வழங்கினார்கள்.  இம்முகாமிற்கான ஏற்பாடுகளை புதுவாழ்வு திட்ட பகுதி அணித்தலைவர் ஜே.மணிகண்டன், எஸ்.சுனில்குமார், கே.கலைவாணன் ஆகியோர்
செய்திருந்தனர். ஊராட்சி செயலாளர் பி.ஏழுமலை நன்றி கூறினார்.

No comments