பேரூந்து நிழற்குடை இல்லாததால் பொது மக்கள் மாணவ மாணவியர்கள் அவதி
உத்தரமேரூர் அடுத்த காரியமங்கலம் கூட்ரோட்டில்
1991 ஆம் ஆண்டு 25 ஆயிரம் மதிப்பில் பேரூந்து பயணியற் நிழற்குடை
கட்டப்பட்டது. 2012 செப்டம்பர் மாதத்தில் தனியார் வாகன விபத்தில் நிழற்குடை
முற்றிலும் இடிந்து சேதமடைந்துவிட்டது. இது
தொடர்பாக இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை காரியமங்கலம்,
ஜே.பி.நகர் காட்டுக்கொல்லை, நாஞ்சிபுரம், ஆழ்வராம்பூண்டி, மேட்டுக்கொல்லை
ஆகிய கிராமங்களுக்கு செல்லும் ஆயிரத்திற்க்கும் மேற்ப்பட்ட கிராம மக்கள்
இந்நிழற்குடையை பயன்படுத்த வேண்டியுள்ளதால் மீண்டும் இந்நிழற்குடையை
அமைத்து தர அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments