Disqus Shortname

களியாம்பூண்டி ஆசிரியர் பயிற்சியில் மாவட்ட ஆட்சியர் லி.சித்ரசேனன் ஆய்வு

உத்தரமேரூர் செப், 5
உத்தரமேரூர் தாலுககா களியாம்பூண்டி ஆசிரியர் பயிற்சியில் புதன்கிழமையன்று காஞ்சி மாவட்ட ஆட்சியர் லி.சித்ரசேனன் திடீரென ஆய்வு செய்தார். அங்கு பயிலும், மாணவ, மாணவியரின்  குறைகளை கேட்டார்.
அப்போது மாணவியர் உத்தரமேரூரில் இருந்து களியாம்பூண்டிக்கு காலை 8.30 மணிக்கு அரசு பேரூந்து விட வேண்டும், எங்களுக்கு பஸ் பாஸ் அளிக்க வேண்டும், இங்கு குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. அதை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று கூறினார்கள். கலெட்டர் லி.சித்ரசேனன் சம்மந்தபட்ட அதிகாரிகளிடம் இக்குறைகளை எடுத்து கூறி உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். உத்தரமேரூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் வாலாஜாபாத்.பா.கணேசன், ஆர்.டி.ஓ.சக்திமணி, உடன் இருந்தனர்.

No comments