களியாம்பூண்டி ஊராட்சியில் நாளை மனு நீதிநாள் முகாம்
உத்திரமேரூர் செப்டம்பர் 02,
உத்திரமேரூர் ஒன்றியத்திற்க்கு உட்பட்ட,
களியாம்பூண்டி ஊராட்சியில் நாளை, 4 ம் தேதி, மனுநீதி நாள் முகாம் நடக்க
உள்ளது. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சி தலைவர் சித்ரசேனன் தலைமை
தாங்குகிறார். முகாமில், களியாம்பூண்டி ஊராட்சிக்கு
உட்பட்ட,பொதுமக்கள் கலந்துகொண்டு, பிரச்னை தொடர்பாக மனுக்கள்
கொடுக்கலாம்.குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், மனை பட்டா, விதவை நிவாரணம்,
முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்டவை பெற, மனுக்களை கொடுத்து, உடனடியாக
பயன் அடையலாம் என, உத்திரமேரூர் வட்டாட்சியர் சாவித்திரி
தெரிவித்துள்ளார்.
No comments