Disqus Shortname

மாகரல் கிளை இந்தியன் வங்கி நேரடி 1.5 கோடி கடன் கொடுத்து சாதனை

உத்தரமேரூர் செப்,05
உத்தரமேரூர் ஒன்றித்தில் செயல்பட்டு வரும் புதுவாழ்வு திட்டம், பாலேஸ்வரம் மற்றும் திருப்புலிவனம் பகுதிக்குட்பட்ட வயலக்காவூர் நெய்யாடுபாக்கம், மலையாங்குளம், ஆனம்பாக்கம்  ஆதவப்பாக்கம், காவாம்பயிர் மற்றும் புலிவாய் ஊராட்சிகள் சார்ந்த 45 சுய உதவி குழுக்களுக்கு தொழில் செய்வதற்கான ரூ,1.5கோடி ரூபாய் கடனுதவி வழங்கி மாகரல் கிளை இந்தியன் வங்கி சாதனை படைத்துள்ளது. தற்போது புதுவாழ்வு திட்டம் செயல்படும் மேற்கண்ட ஊராட்சிகளில் உள்ள சுய உதவிக்குழுக்கள் புதுவாழ்வு திட்டத்தால் தர மதிப்பீடு செய்யப்பட்டு மேற்கண்ட கடன் பெற பரிந்துரை செய்யப்பட்டு தற்சமயம் வழங்கப்பட்டு வருகிறது. 585 நபர்கள் பயன்பெற்றுள்ளனர். நிதியினை விடுவித்த இந்தியன் வங்கிக்கு சுய உதவிக்குழுவினரும், புதுவாழ்வு திட்ட அணித்தலைவர் ஜெ.மணிகண்டனும் நன்றி தெரிவித்து கொண்டனர்.

No comments