Disqus Shortname

சட்ட உதவி சட்ட விழிப்புணர்வு முகாம்

உத்தரமேரூர் செப்,21

உத்தரமேரூர் தாலுக்கா கடல்மங்கலம் கிராமம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் சனிக்கிழமையன்று உத்தரமேரூர் வட்ட சட்டப்பணிகள் குழு நடத்திய அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினருக்கான சட்ட உதவி, சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. உத்தரமேரூர் மாவட்ட உரிமையியல் நீதிபதி மற்றும் தலைவர் வட்ட சட்டப்பணிகள் குழு உத்தரவின்படி வழக்கறிஞர்கள், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும்  உறுப்பினர்கள், கிராம நிர்வாக அலுவலர் முக்கிய பிரமுகர்கள், மகளிர் சுய உதவி  குழுக்கள் கலந்து கொண்ட இம்முகாமில் சிவில் வழக்குகள் நடத்த மேல் முறையீடு செய்ய, பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை, சொத்துக்கள் பற்றிய பிரச்சனைகள் உட்பட பல்வேறு வழக்குகள் பற்றி கூறினார்கள். இம்முகாமில் கடல்மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் தே.வீராசாமி அனைவரையும் வரவேற்றார். உத்தரமேரூர் மாவட்ட உரிமையியல் நிதித்துறை நடுவர் நீதிபதி ஜெய்சங்கர் பார்அ.சோஷியேஷன் தலைவர் வழக்கறிஞர் என்.அறுமுகம் தலைமை தாங்கினார். வழக்கறிஞர்கள் ஏ.அன்பழகன் இ.ராஜ்குமார், ஏ.கருணாநிதி. சிறப்புரையாற்றினார்கள்.  மற்றும் வழக்கறிஞர்கள் சந்தானகிருஷ்ணன் டி.கிருஷ்ணன், நந்தகோபால், பெருமாள், பாலாஜி, கண்ணபிரான், கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை வட்ட சட்ட பணிகள் குழுவின் நிர்வாக உதவியாளர் கே.இராமலிங்கம் செய்திருந்தார். முடிவில் வழக்கறிஞர் கே.சண்முக சுந்தரம் நன்றி கூறினார். 

No comments