இடிந்து விழும் அபாய நிலையில் சாத்தஞ்சேரி பள்ளி கட்டிடம்
உத்திரமேரூர் ஒன்றியம் சாத்தணாஞ்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை 152 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். 70 ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்ட இப்பள்ளி, கடந்த 4 ஆண்டுக்கு முன்பு நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது பள்ளியின் கூரையில் ஓடுகள் பெயர்ந்தும், சுவர்கள் சேதமடைந்துள்ளன.
பழைய கட்டிடம் என்பதால் எப்போது இடிந்து விழும் என தெரியவில்லை. இதனால் மாணவ, மாணவிகள் அச்சத்துடன் படித்து வருகின்றனர். பெற்றோரும் பயத்தில் உள்ளனர். இது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சாத்தணாஞ்சேரி ஊராட்சி தலைவர் வேணு காஞ்சிபுரம் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளார். எனவே, பழுதடைந்துள்ள பள்ளி கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டித்தர மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பழைய கட்டிடம் என்பதால் எப்போது இடிந்து விழும் என தெரியவில்லை. இதனால் மாணவ, மாணவிகள் அச்சத்துடன் படித்து வருகின்றனர். பெற்றோரும் பயத்தில் உள்ளனர். இது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சாத்தணாஞ்சேரி ஊராட்சி தலைவர் வேணு காஞ்சிபுரம் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளார். எனவே, பழுதடைந்துள்ள பள்ளி கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டித்தர மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
No comments