Disqus Shortname

திருப்புலிவனத்தில் அண்ணா 105-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

உத்தரமேரூர் செப்,19
உத்தரமேரூர் கிழக்கு ஒன்றியம், திருப்புலிவனத்தில் செவ்வாய்கிழமையன்று அண்ணா 105-வது பிறந்தநாள்விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.  கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் கே.பிரகாஷ்பாபு தலைமை தாங்கினார்.  உத்தரமேரூர் தொகுதி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசன் முன்னிலை வகித்து சிறப்புரையாற்றினார்.  ஒன்றிய குழுத்தலைவர் ஆர்.கமலக்கண்ணன், அ.ரவிசங்கர் வரவேற்றனர்.  இக்கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் புதுகை எம்.செல்லம் சிறப்புரையாற்றினார்.  மாவட்ட பாசறை செயலாளர் டி.சந்திரமௌலி, டி.சி.கிருஷ்ணன், டி.எம்.சடையாண்டி, திருவந்தவார் முருகன், தண்டரை தணிகைவேல், காவாம்பயிர் எஸ்.குணசேகரன், புலிவாய் ஊராட்சி மன்றத்தலைவர் பி.ராஜ்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.  திருப்புலிவனம் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் ஆர்.கார்வண்ணன் நன்றி கூறினார்.

No comments