Disqus Shortname

உத்தரமேரூர் மன்னன் குடிசை பகுதியில் 2வீடுகளில் தொடர் கொள்ளை

உத்தரமேரூர் ஜன,18
உத்தரமேரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட  17 வது வார்டில் உள்ள மன்னன் குடிசை பகுதியில் வசிக்கும்  ரமேஷ் மற்றும் ராமதாஸ் தனது தாயாருடன் தனித்தனியாக வசித்து வருகின்றனர். வியாழக்கிழமையன்று மதியம்  வந்தவாசியை அடுத்த  மருதாடு கிராமத்தில்  நடைபெற்ற  தனது  உறவினர் திருமணத்திற்க்கு  குடும்பத்துடன்  சென்றிருந்தனர்.  தாயார் மட்டும்  அருகில்  லிருந்த  உறவினர் வீட்டில் படுத்திருந்தார். இரவு வீட்டினுள்  சத்தம் கேட்டதை  அறிந்த தாயார் கன்னியம்மாள் டார்ச் லைட்டின் உதவியுடன் வெளியே வந்து பார்த்த போது மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே கொள்ளையர்கள் இருப்பதை கண்ட கன்னியம்மாள் அதிர்ச்சியடைந்தார்
உடனே அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்களை அழைத்துள்ளார் பொது மக்கள் வருவதை அறிந்த கொள்ளையர் வீட்டில் இருந்து வெளியே வந்து  ஓட்டம் பிடித்தனர். பொது மக்கள் விரட்டியதில் ஒருவர் பிடிபட்டார் அவரை உத்தரமேரூர். காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 8 சவரன் தங்க நகை மற்றும் 10 ஆயிரம் ரொக்கம்,  வெள்ளிப்பொருட்கள்  கொள்யையர்கள் திருடிசென்றுள்ளதை அறிந்து அதிர்ச்சியுற்று கன்னியம்மாள் கதறி அழதார்..பிடிபட்டவரை காவல் துறையினர் கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இக்கொள்ளை சம்பவம் அக்கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

No comments