Disqus Shortname

விடிவெள்ளி கிராம கற்றல் மையம் திறப்பு விழா

உத்தரமேரூர் ஜன -5
        காஞ்சிபுரம் மாவட்டம், புதுவாழ்வு திட்டத்தின் விடிவெள்ளி கிராம கற்றல்
மையம் உத்தரமேரூர் ஒன்றியத்தில் உள்ள காவனூர்புதுச்சேரி, அகரம்தூளி
ஊராட்சிகளில் கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களின் மூலமாக நூலகங்களில்
வெள்ளிக்கிழமையன்று துவக்கப்பட்டது.
 காவனூர்புதுச்சேரி கிராம ஊராட்சி
மன்ற தலைவர் ஆர்.ஸ்டாலின், அகரம்தூளி ஊராட்சி மன்றத்தலைவர் பழனி, இரு
ஊராட்சிகளிலும் தலைமை தாங்கிநடத்திவைத்தனர்.  புதுவாழ்வு திட்ட
அணித்தலைவர் எம்.இலட்சுமணன், சி.எஸ்.தாரகேஸ்வரி, கே.கோபால், அகரம்தூளி
பள்ளித் தலைமை ஆசிரியை சரஸ்வதி, டி.அஞ்சலிதேவி, கலைவாணி, சமூக ஆர்வளர்
ஜெ.தேவசேனாபதி, ஏழுமலை ஆகியோர் கலந்துகொண்டார்கள்.  துணைத்தலைவர்,
விநாயகமூர்த்தி, ஊராட்சி செயலாளர் மோகன், விபிஆர்சி, பிஎல்எப்
பொருப்பாளர்கள் ஜெயந்தி, பாக்கியலட்சுமி, சங்கரி ஆகியோர் நிகழ்ச்சியினை
ஏற்பாடு செய்திருந்தனர்.

No comments