அக்ஷாயா பொறியியல் கல்லூரியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்
உத்திரமேரூர் அருகில் புழுதிவாக்கத்தில உள்ள அக்ஷாயா பொறியியல் கல்லூரியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் ((Mega job fair ); 05.01.2013 சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் நடைபெற உள்ளது. இம்முகாமில் அனைத்து பொறியியல் பட்டம் படித்த மாணவ மாணவிகளும் பொறியியல் பட்டயப்படிப்பு (Diploma) படித்த மாணவமாணவிகளும் மற்றும் கலை அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகளும் கலந்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள். இதில் 2011-12-ல் முடித்த மாணவஃமாணவிகளும் 2012-13-ல் முடிக்க போகும் மாணவ மாணவிகளும் கலந்து கொள்ளலாம். இந்த முகாம் நடத்தவதற்காக 15-க்கும் மேற்பட்ட நிறுவனங்களிலிருந்து மனிதவளத்துறை மேலாளர்கள் சுமார் 1500 க்கு மேற்பட்ட காலியிடங்களை நிரப்புவதற்காக நேர்முகம் நடத்த இக்கல்லூரிக்கு வருகை தர உள்ளார்கள். இந்த வாய்ப்பினை அனைத்து கல்லூரி மாணவமாணவிகளும கல்லூரி முடித்த மாணவ மாணவிகளும் கலந்து கொண்டு பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு (www.ace.ac.in) என்ற இணையதள முகவரியை தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.
அக்ஷாயா பொறியியல் கல்லூரியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்
Reviewed by Uhiramerur News.Com Admin
on
January 04, 2013
Rating: 5
No comments