மீனாட்சி அம்மாள் தொழில் நுட்பக் கல்லுாரியில் நாட்டு நலப்பணித் திட்ட துவக்க
உத்தரமேரூர்
மீனாட்சி அம்மாள் தொழில் நுட்பக்கல்லுாரி நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு
முகாம் புதன்கிழமையன்று கடல்மங்களம் மற்றும் எல்லன் நகரில் துவங்கியது
தொழிற் பயிற்சி மைய அலுவலர் வி.இராஜேந்திரன் வரவேற்றார். கல்லுாரி முதல்வர்
ஏ.இராஜா தலைமை தாங்கினார். கடல்மங்களம் ஊராட்சி மன்றத்தலைவர் தே.வீராசாமி
முன்னிலை வகித்தார். மல்லியங்கரணை ராமகிருஷ்ணா மிஷின் சுவாமி அமுர்தானந்தா
மஹராஜ், காஞ்சி பல்லவாசிட்டி அரிமா சங்க தலைவர் யூ.கோபாலகிஷ்ணன் ஊராட்சி
மன்ற துணைத்தலைவர் சாந்தி சீனிவாசன் மாரியப்பன் நசீராபேகம் வாழ்த்தி
பேசினார்கள். என்.எஸ்.எஸ்.திட்ட அலுவலர் எஸ்.மோகன் நன்றி கூறினார்.
இம்முகாமில் எய்ட்ஸ் விழிப்புணர்வு, இலவச கண் பரிசோதனை முகாம் மழைநீர்
சேகரிப்பு முதலுதவி மற்றும் தீவிபத்தும் பாதுகாப்பும் மின்சாரம் சார்ந்த
பொருட்களின் பராமரிப்பு மரக்கன்றுகள் நடுதல் முதியோர் இல்லம் பார்வையிடல்
பொது மருத்துவம், சுயவேலை வாய்ப்பு பற்றிய கருத்தரங்கம் இலவச சித்த
மருத்துவ முகாம் கிராமப்புற பெண்களுக்கு தொழில் பயிற்சி அளித்தல்
யோகாவம்,உடல் ஆரோக்கியமும் பற்றி பணியாற்ற உள்ளனர். பிப்ரவரி 5 ம் தேதியன்று முகாம் நிறைவடைகிறது.
No comments