Disqus Shortname

திட, திரவ கழிவு மேலாண்மை கருத்தரங்கம்

உத்தரமேரூர் ஜன-24
     உத்தரமேரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் வியாழக்கிழமையன்று தமிழ்நாடு நீர்வள நிலவளத்திட்டம், கூடு தொண்டு நிறுவனம் செய்யாறு – கிளியாறு உபவடிநிலப்படுகை, பாலாறு வடிநிலப்படுகையில் நடக்கும் திட மற்றும் திரவக்கழிவு
மேலாண்மை பற்றிய உள்ளாட்சி அமைப்புகளுக்கான கருத்தரங்கம் நடந்தது. நீர்வள ஆதாரத்துறை உதவி செயற்பொறியாளர் மா.சி.இந்திராபிரியதர்ஷினி அனைவரையும் வரவேற்றார்.  ஒன்றிய குழுத்தலைவர் ஆர்.கமலக்கண்ணன் தலைமை தாங்கி கருத்தரங்கை துவக்கிவைத்தார்.  இக்கருத்தரங்கில் கூடு தொண்டு நிறுவன செயலாளர் ச.கதிரேசன், கூடு தொண்டு நிறுவன வல்லுநர் பேராசிரியர் சி.மணி, தொண்டு நிறுவன இயக்குநர் சடகோபன், பாரத சுகாதார இயக்க வட்டார ஒருங்கிணைப்பாளர் ஆர்.சுரேஷ் ஆகியோர் திட மற்றும் திரவக்கழிவுகளை உள்ளாட்சிகளில் எப்படி கையாளுவது என்றும் அதனால்
ஏற்படும் பிரச்சனைகளை தீர்ப்பது குறித்து விளக்கி கூறினார்கள்.  ஊராட்சி
ஒன்றிய கிராமத்தலைவர்கள் திரலாக பங்கேற்றனர். கூடு தன்னார்வ தொண்டு நிறுவன இணைச்செயலாளர் எம்.எ.சாய்தாபேகம் நன்றிகூறினார்.

No comments