புல்லம்பாக்கம் ஊராட்சியில் 108 பயனாளிகளுக்கு பேன், மிக்சி, கிரைண்டர் வழங்கும் விழா,
உத்தரமேரூர் ஜன,20
உத்தரமேரூர்
தாலுக்கா புல்லம்பாக்கம் ஊராட்சியில் விலையில்லா மிக்சி,பேன், கிரைண்டர், வழங்கும்
விழா ஞாயிற்றுக்கிழமையன்று நடந்தது. ஊராட்சி மன்ற
தலைவர் பி.எஸ். ஜெயவேல் தலைமை தாங்கினார்.
ஒன்றிய குழு தலைவர் ஆர்.கமலக்கண்ணன், ஒன்றிய கழக செயலாளர் கே.பிரகாஷ்பாபு முன்னிலை வகித்தனர். கிராம நிர்வாக அலுவலர் ரவிக்குமார் வரவேற்றார்.
சட்ட பேரவை உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசன் கலந்துகொண்டு 198 பயனாளிகளுக்கு மிக்சி,
பேன், கிரைண்டர், வழங்கி சிறப்புரையாற்றினார். இவ்விழாவில் குண்ணவாக்கம் ஆர்.கிருஷ்ணமூர்த்தி
பி.கோபாலகிருஷ்ணன் கிளை செயலாளர் வெங்கடேசன் ஆர்.ஜ.பிரகாஷ் மற்றும் தமிழ் நாடு ஆதிதிராவிடர்
நலக்குழு உறுப்பினர் அத்திவாக்கம் செ.ரமேஷ் மாவட்ட குழு உறுப்பினர். சுமதி குணசீலன்
தண்டரை தணிகைவேல் உட்பட பலர் கலந்துகொண்டனர். உத்தரமேரூர் தாலுக்கா பேரனக்காவூர் ஊராட்சியில்
203 பயனாளிகளுக்கு விலையில்லா பேன்,மிக்சி, கிரைண்டர் சட்ட பேரவை உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசன் வழங்கி
வாழ்த்தி பேசினார். ஒன்றிய குழு தலைவர் ஆர்.கமலக்கண்ணன் தலைமை தாங்கினார். ஒன்றிய கழக
செயலாளர் கே.பிரகாஷ்பாபு முன்னிலை வகித்தார்.
தண்டரை தணிகை வேல் நன்றி கூறினார்.
No comments