Disqus Shortname

உத்தரமேரூரில் இன்று மாபெரும் கைபந்து போட்டி துவக்கம்

உத்தரமேரூர் ஜன -5
தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆணைக்கிணங்க காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட இளைஞர் பாசறை இளம்பெண்கள் பாசறை சார்பில் மாவட்ட அளவிலான ஆடவர் மற்றும் மகளிருக்கான மாபெரும் கைபந்துபோட்டி இன்று சனிக்கிழமை காலை 9 மணியளவில் உத்தரமேரூர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் துவங்குகிறது. காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட இளைஞர் பாசறை இளம்பெண்கள் பாசறை செயலாளர் டி.சந்திரமௌலி தலைமை தாங்குகிறார். உத்தரமேரூர் ஒன்றிய கழக செயலாளர்கள் வி.ஆர்.அண்ணாமலை, கே.பிரகாஷ்பாபு, ஒன்றிய குழுத்தலைவர் ஆர்.கமலக்கண்ணன், காஞ்சி மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற இணைச்செயலாளர் கே.தயாளன், ஒன்றிய குழு துணைத்தலைவர் அ.ரவிசங்கர், பேரூர் கழக செயலாளர் கே.லட்சுமணன், பேரூராட்சி துணைத்தலைவர் இ.தயாளன் முன்னிலை வகிக்கிறார்கள். மாவட்ட பாசறை தலைவர் என்.டி.எஸ்.சுபாஷ் வரவேற்கிறார். கழக இளைஞர் பாசறை
இளம்பெண்கள் பாசறை செயலாளர் அரசு தலைமை கொரடா டாக்டர் வைகைசெல்வன் போட்டிகளை துவக்கிவைத்து பரிசுகள் வழங்குகிறார். இவ்விழாவில்
காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட கழக செயலாளர், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா, காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட கழக செயலாளர்,
காஞ்சி எம்.எல்.ஏ., வி.சோமசுந்தரம், உத்தரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசன், திருப்பெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் மொளச்சூர்
இரா.பெருமாள் உட்பட பலர் வாழ்த்திபேசுகிறார்கள். ஆர்.மணிகண்டன், வி.பி.சதிஷ், பி.குணா நன்றி கூறுகிறார்கள். விழாவிற்கான ஏற்பாடுகளை
காஞ்சிபுரம் மேற்கு மாவட் இளைஞர் பாசறை இளம்பெண்கள் பாசறை செய்துள்ளனர்.

--
Tanks
by
Utr Guys Suresh.S
Uthiramerur.

No comments