Disqus Shortname

*மானாம்பதி அரசு மேல்நிலைப்பள்ளி 75 லட்சத்தில் புதிய கட்டிடத்திற்கு பூமிபூஜை விழா*

உத்தரமேரூர் ஜன-26

உத்தரமேரூர் தாலுக்கா மானாம்பதி அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.75 லட்சத்தில்
கட்டப்படவுள்ள புதிய கட்டிடத்திற்கு பூமிபூஜை நடத்தி அடிக்கல்நாட்டுவிழா
ஞாயிற்றுகிழமையன்று நடந்தது.  பள்ளித் தலைமை ஆசிரியர் த.சண்முகம் வரவேற்றார்.
மானாம்பதி ஊராட்சி மன்றத்தலைவர் சம்பத் தலைமை தாங்கினார்.  பெற்றோர் ஆசிரியர்
சங்கத்தலைவர் ரவிந்திரதாஸ் முன்னிலை வகித்தார்.  மாவட்ட ஆட்சித்தலைவர்
எல்.சித்திரசேனன், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் வி.சோமசுந்தரம்,
உத்தரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசன் ஆகியோர் பூமிபூஜை
நடத்தி அடிக்கல் நாட்டினர்.  இவ்விழாவில் ஒன்றிய குழுத்தலைவர்
ஆர்.கமலக்கண்ணன், துணைத்தலைவர் அ.ரவிசங்கர், காஞ்சி பன்னீர்செல்வம், ஒன்றிய
கழக செயலாளர்கள் வி.ஆர்.அண்ணாமலை, கே.பிரகாஷ்பாபு, உட்பட பலர் கலந்துகொண்டனர்.
 விழாவிற்கான ஏற்பாடுகளை அ.ரவிசங்கர் செய்திருந்தார்.
by
  Suresh.S
  Uthiramerur.
                                                                                                                  

No comments