Disqus Shortname

மின்சாரம் தாக்கி இளைஞர் சாவு

உத்தரமேரூரில், திங்கள் கிழமை இரவு வயலுக்கு சென்ற இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
உத்தரமேரூரில், திங்கள் கிழமை இரவு வயலுக்கு சென்ற இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
உத்தரமேரூர் கருணீகர் தெருவில் வசிப்பவர் ராமலிங்கம். இவர் தனது வயலில் எலித் தொல்லையை கட்டுப்படுத்த மின்வேலி அமைத்துள்ளார். உத்தரமேரூர் வண்டிக்காரத் தெருவில் வசிக்கும் ராமன் மகன் கண்ணன் (30). இவர் ராமலிங்கத்தின் வயலுக்கு அருகே உள்ள தன் நிலத்தை சுற்றிப்பார்க்க திங்கள் கிழமை இரவு சென்றுள்ளார்.
அப்போது ராமலிங்கத்தின் வயலில் இருந்த மின்சார கம்பியில் கண்ணன் கவனிக்காமல் மிதித்துள்ளார். உடனே மின்சாரம் தாக்கியதில் கண்ணன் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த உத்தரமேரூர் போலீஸார் உடலை செங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து ராமலிங்கத்தை கைது செய்தனர்.

No comments