Disqus Shortname

ஒழையூரில் 226 பயனாளிகளுக்கு விலையில்லா மிக்ஸி, பேன், கிரைண்டர் வழங்கும் விழா

உத்தரமேரூர் ஜன-22 
     உத்தரமேரூர் தாலுக்கா, ஒழையூர் கிராமத்தில் ஞாயிற்றுகிழமையன்று விலையில்லா பேன், மிக்ஸி, கிரைண்டர் வழங்கும் விழா நடந்தது. ஒன்றிய குழுத்தலைவர் ஆர்.கமலக்கண்ணன் தலைமைதாங்கினார். ஊராட்சி மன்றத்தலைவர் எம்.எல்லப்பன் முன்னிலை வகித்தார். கிராம நிர்வாக அலுவலர் கணேசமூர்த்தி வரவேற்றார்.  துணைத்தலைவர் பி.மோதில்தாஸ், எம்.ஜி.ஆர்.மன்ற மாவட்ட அவைத்தலைவர் ஒழையூர் ஆர்.நாராயணசாமி ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.  உத்தரமேரூர் சட்டபேரவை உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசன் கலந்துகொண்டு 226 பயனாளிகளுக்கு விலையில்லா பேன், மிக்ஸி, கிரைண்டர் வழங்கி சிறப்புரையாற்றினார். மேலும் இவ்விழாவில் ஒன்றிய கழக செயலாளர் கே.பிரகாஷ்பாபு, சாலவாக்கம் ஒன்றிய குழு உறுப்பினர் வனிதாமுருகன், மாவட்ட குழு உறுப்பினர் சுமதி குணசீலன், உத்தரமேரூர் கிழக்கு ஒன்றிய எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் டி.தணிகைவேல், உத்தரமேரூர் கிழக்கு ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் எம்.முருகன், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற துணைச்செயலாளர் குண்ணவாக்கம் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய இளைஞரணி செயலாளர் எம்.கே.பி.வேலு, மேனலூர் வேலாயுதம், ஆதவபாக்கம் கோதண்டன், புத்தளி ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.குணசேகரன், கன்னிகுளம் ஊராட்சி மன்றத்தைலைவர் பி.ராஜ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.  ஒன்றியகுழு உறுப்பினர் ஆனந்தன் நன்றி கூறினார்.
Tanks
by
  Suresh.S
  Uthiramerur.

No comments