உத்தரமேரூர் கலை அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா
உத்தரமேரூர் ஜன -11 உத்தரமேரூர் மீனாட்சியம்மாள் கலை அறிவியல் கல்லூரில் வெள்ளிக்கிழமையன்று பொங்கல்விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. பேராசிரியர் எம்.பூங்குமரி வரவேற்றார்.
இவ்விழாவில் கல்லூரி மாணவிகள் கோலப்போட்டியில் கலந்துகொண்டனர். மேலும்,
கவியரங்கம், பாடலரங்கம், கரகாட்டம், பரதநாட்டியம், கருத்தரங்கம்,
பட்டிமன்றம், வழக்காடுமன்றம், வாழ்த்தரங்கம் ஆகிய நிகழ்ச்சிகளில்
கலந்துகொண்டு சிறப்பிடம் பெற்றவர்களுக்கு ஸ்ரீநந்தா வேளாண் ஆய்வு மையத்தின்
இயக்குநரும், மீனாட்சியம்மாள் கலை அறிவியல் கல்லூரி தமிழ், பிரஞ்சு
மொழித்துறைத்தலைவருமான பேராசிரியர் க.முருகானந்தம் தலைமை தாங்கி முதலிடம்
பெற்ற அணிகளுக்கு கேடயமும்,
பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கி வாழ்த்திபேசினார். கல்லூரி மாணவ மாணவியர் புதுப்பானையில் பொங்கலிட்டு பொங்கலோ பொங்கல் என கூக்குரலிட்டு வழிபட்டனர். பேராசிரியை என்.தேவி நன்றி கூறினார்.
பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கி வாழ்த்திபேசினார். கல்லூரி மாணவ மாணவியர் புதுப்பானையில் பொங்கலிட்டு பொங்கலோ பொங்கல் என கூக்குரலிட்டு வழிபட்டனர். பேராசிரியை என்.தேவி நன்றி கூறினார்.
No comments