Disqus Shortname

திருப்புலிவனத்தில் இலவச வேட்டி, சேலை வழங்கும் விழா

உத்தரமேரூர் ஜன - 3
உத்தரமேரூர் தாலுக்கா திருப்புலிவனம் கிராமத்தில் 550 குடும்பத்திற்கு
இலவச வேட்டி, சேலை வழங்கும் விழா புதன்கிழமையன்று ஊராட்சி ஒன்றிய
கட்டிடத்தில் நடந்தது.  ஊராட்சி மன்ற தலைவர் பி.சரளாபிரகாஷ்பாபு தலைமை
தாங்கினார்.  உத்தரமேரூர் வட்டாட்சியர் கே.தேவராஜன் அனைவரையும்
வரவேற்றார்.  ஒன்றியக்குழு தலைவர் ஆர்.கமலக்கண்ணன், துணைத்தலைவர்
.ரவிசங்கர் முன்னிலை வகித்தனர். உத்தரமேரூர் தொகுதி சட்டபேரவை
உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசன் கலந்துகொண்டு 550 குடும்பத்தினருக்கு
இலவச வேட்டி சேலை வழங்கி சிறப்புரையாற்றினார்.  இவ்விழாவில் ஒன்றிய கழக
செயலாளர் கே.பிரகாஷ்பாபு, திருப்புலிவனம் ஒன்றிய குழு உறுப்பினர்
கார்வண்ணன், மண்டல துணைவட்டாட்சியர் கே.கலைமணி, வருவாய் ஆய்வாளர்
தேன்மொழி, ஆதவப்பாக்கம் கோதண்டன், சாலவாக்கம் ஒன்றிய குழு உறுப்பினர்
வனிதாமுருகன், தண்டரை தணிகைவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.  அலுவலக
உதவியாளர் அமரேசன் நன்றி கூறினார்.

No comments