Disqus Shortname

போக்குவரத்துக்கு லாயக்கற்ற கடல்மங்கலம் சாலை

உத்திரமேரூர்அக்,30:
உத்திரமேரூர் அடுத்த மல்லியங்கரணை கூட்டுரோடு முதல் கடல்மங்கலம் செல்லும்
சாலையில் ஏற்பட்டுள்ள மெகா பள்ளம்.
உத்திரமேரூர் அடுத்த மல்லியங்கரணை கூட் ரோட்டில் இருந்து மல்லியங்கரணை, கடல்மங்கலம், சித்தமல்லி ஆகிய கிராமங்களுக்கு செல்லும் சாலை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. இந்த சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருவதால் பெரிய அளவில் பள்ளங்கள் உருவாகி பழுதடைந்து காணப்படுகிறது. மேலும் இரு சக்கர வாகன ஓட்டிகள் அதிவேகமாக செல்வதால் சில நேரங்களில் எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். மல்லியங்கரணை மற்றும் உத்திரமேரூர் பள்ளிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள், இந்த மோசமான சாலையால் அவதிப்படுகின்றனர்.

முதியோர், கர்ப்பிணிகள், நோயாளிகள் அவசர சிகிச்சைக்காக உத்திரமேரூர் மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர். இரவு நேரங்களில் இந்த சாலைகளில் தெருவிளக்குகள் எரிவதில்லை. இதனால் புதிதாக வரும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு விபத்து ஏற்படுவது அன்றாட நிகழ்வாகிறது.இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு சாலையை சீரமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

No comments