Disqus Shortname

சாலவாக்கத்தில் 15 லட்சத்தில் கட்டப்பட்டபேருந்து நிலைய மேற்கூரை திறப்பு விழா

உத்திரமேரூர் செப்.30
உத்திரமேரூர் தாலுக்கா சாலவாக்கம் கிராமத்தில் 15 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பேருந்து நிலைய மேற்கூரை திறப்பு விழா நடைபெற்றது, உத்திரமேரூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினரும், மாவட்ட கழக செயலாளருமானவாலாஜாபாத் கணேசன் தலைமை தாங்கினார். ஒன்றிய குழுத்தலைவர்கள் ஆர்.கமலக்கண்ணன், திருவந்தவார்முருகன், மாவட்ட குழு உறுப்பினர் சுமதிகுணசீலன், தண்டரை தணிகைவேல் முன்னிலை வகித்தனர், ஒன்றிய கழக செயலாளர் கே.பிரகாஷ்பாபு வரவேற்றார். கால்நடைபராமரிப்புத்துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னய்யா 15 லட்சத்தில் கட்டப்பட்ட பேருந்து நிலைய மேற்கூரையை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். இவ்விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் மரகதம்குமரவேல், காஞ்சி பன்னீர்செல்வம்,தங்கபஞ்சாட்சரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்

No comments