Disqus Shortname

உத்திரமேரூரில் நடந்த வரும் பள்ளி மற்றும் கல்லூரி கட்டிடப்பணிகளை எம்.எல்.ஏ ஆய்வு

உத்திரமேரூர் அக், 15

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுக்கா திருப்புலிவனம் பகுதியில் 7 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டிடப்பணி மற்றும் உத்திரமேரூர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் ஆய்வுக் கூட கட்டிடம் ரூ.1.69 கோடி ஒதுக்கப்பட்டு புதியதாக கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் கட்டிடங்களை காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட செயலாளரும் உத்தரமேரூர் சட்ட மன்ற உறுப்பினருமான வாலாஜாபாத்பா.கணேசன் வியாழக்கிழமையன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். உடன் ஒன்றிய செயலாளர் பிரகாஷ்பாபு, ஒன்றிய குழு தலைவர்கள் ஆலஞ்சேரி இரா.கமலக்கண்ணன், தும்பவனம் ஜீவானந்தம், தென்னேரி வரதராஜீலு, மாவட்ட இளைஞரணி இணை செயலாளர் பொ.சசிகுமார், புலியூர் பழனி, வெடி ஆனந்தன், மாவட்ட பிரதிநிதி கே.சி.எம்.விஜய், டில்லி (எ) ராதாகிருஷ்ணன், பூந்தண்டலம் ராஜேந்திரன், அ.பி.சத்திரம் பெருமாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  

No comments