Disqus Shortname

உத்திரமேரூர் பாலசுப்பிரமணி கோவிலில் இலட்ச தீப விழா

உத்திரமேரூர் அக் 01
 உத்திரமேரூர் ஸ்ரீ பாலசுப்ரமணியர் சுவாமி கோவிலில் இலட்ச தீப விழா
நடந்தது. விழாவையொட்டி சுவாமிக்கு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. பின்னர் விசேஷ பூஜைகள் முடிந்தது வள்ளி தெய்வாணையுடன் ஸ்ரீபாலசுப்ரமணியர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். கோவிலை சுற்றிலும் பக்தர்கள் திரளாக  கலந்து கொண்டு அகல் மற்றும் எலும்பிச்சை உள்ளிட்டவைகளில் நெய்தீபங்கள்ஏற்றி சுவாமியை வழிபட்டனர். இந்த தீபங்கங்கள் எரியும் போது கோவில் ரம்யமாக காட்சியளித்தது. கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இலட்சதீப விழாவையொட்ட உத்திரமேரூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து விளக்கேற்றி
சுவாமியை வழிபட்டனர்.

No comments