Disqus Shortname

மீனாட்சி அம்மாள் குளோபல் பள்ளியில் நவராத்திரி விழா

உத்திரமேரூர் அக், 17
உத்திரமேரூர் மீனாட்சி அம்மாள் குளோபல் பள்ளியில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பல்வேறு வண்ணங்களில், பல்வேறு வகையான கொலு பொம்மைகள் வைத்து வழிபட்டனர். நவராத்திரியின் சிறப்புகள் குறித்து பள்ளி மாணவ- மாணவியர்கள் பல்வேறு வேடமிட்டு பாடல், நடனம் மூலம் விளக்கமளித்தனர். பள்ளியின் தாளாளர் கோமதிராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு நடத்தினார். நிகழ்ச்சியில் மீனாட்சி அம்மாள் அறக்கட்டளை மேலாண்மை இயக்குநர் மனோகர், காசாளர் கண்ணன், பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments