Disqus Shortname

சாத்தணஞ்சேரியில் அதிமுக 44வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம்

உத்திரமேரூர்.அக்.19
உத்திரமேரூர் கிழக்கு ஒன்றியம் சாத்தணஞ்சேரியில் அஇஅதிமுக 44வது ஆண்டு தொடக்கவிழா பொதுக்கூட்டம் நடைபெற்றது, கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் கே.பிரகாஷ்பாபு தலைமை தாங்கினார், காஞ்சி மேற்கு மாவட்ட கழக செயலாளரும், உத்திரமேரூர் சட்ட மன்ற உறுப்பினருமான வாலாஜாபாத் பா.கணேசன் முன்னிலை வகித்து அதிமுக அரசின் சாதனைகளை பற்றி பேசினார், மேற்கு ஒன்றிய கழக செயலாளர் வி.ஆர்.அண்ணாமலை, ஒன்றிய குழுத்தலைவர் இரா.கமலக்கண்ணன், துணைத்தலைவர் அ.ரவிசங்கர் மாவட்ட குழு உறுப்பினர் சுமதிகுணசீலன் வரவேற்றனர், தலைமை கழக பேச்சாளர் போதி.சந்திரன்  தமிழக முதல்வர் ஜெயலலிதா அரசின் 4 ஆண்டுகளில் செய்துள்ள சாதனைகள் பற்றி விரிவாக விளக்கி பேசினார், இவ்விழாவில் ஒன்றிய எம்.ஜீ.ஆர் மன்ற செயலாளர் தண்டரைதணிகைவேல், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வெடி.ஆனந்தன், வனிதாமுருகன், உட்பட பலர் கலந்துகொண்டனர் அம்மா பேரவை கிளைச்செயலாளர் கே.பாலு நன்றி கூறினார்

No comments